தாராபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உறுதி குறித்த கொடி அணிவகுப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் தாராபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வருகின்ற 19 -ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்வேறு விதமாக பலப்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இப்பேரணியை தாராபுரம் வடக்கு காமராஜபுரம் பகுதியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் துவக்கி வைத்தார்.



இதையடுத்து பேரணி, பெரிய கடைவீதி , ஜவுளிக்கடை வீதி பூக்கடைக்காரர் பொள்ளாச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் அலங்கியம் சாலை வரை பேரணி நடைபெற்றது. இதில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர், ஐந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 போலீசார் மற்றும் குஜராத் ஆயுத படை போலீசார் என மொத்தம் 100 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...