தாராபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உறுதி குறித்த கொடி அணிவகுப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் தாராபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வருகின்ற 19 -ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்வேறு விதமாக பலப்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இப்பேரணியை தாராபுரம் வடக்கு காமராஜபுரம் பகுதியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் துவக்கி வைத்தார்.



இதையடுத்து பேரணி, பெரிய கடைவீதி , ஜவுளிக்கடை வீதி பூக்கடைக்காரர் பொள்ளாச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் அலங்கியம் சாலை வரை பேரணி நடைபெற்றது. இதில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர், ஐந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 போலீசார் மற்றும் குஜராத் ஆயுத படை போலீசார் என மொத்தம் 100 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...