பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்று எல்.முருகன் உறுதியளித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர், தொட்டம்பாளையம் மற்றும் பவானிசாகர் நகர் பகுதிகளில் இன்று ஏப்ரல்.5 மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பெயர் கொண்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு, பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் ‘போலி திராவிட மாடலின்’ முயற்சிகள் முறியடிக்கப்படும், மீன் வளர்ப்புக்கான திட்டப் பணிகள், மத்திய மீன்வளத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன்.



மேலும், முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ‘பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்’ அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்பதை உறுதியளித்துள்ளேன்.

களத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை நம்மால் மட்டுமே தர முடியும். தாமரையின் மலர்ச்சியே, நீலகிரியின் வளர்ச்சி என்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...