பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்று எல்.முருகன் உறுதியளித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர், தொட்டம்பாளையம் மற்றும் பவானிசாகர் நகர் பகுதிகளில் இன்று ஏப்ரல்.5 மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பெயர் கொண்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு, பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் ‘போலி திராவிட மாடலின்’ முயற்சிகள் முறியடிக்கப்படும், மீன் வளர்ப்புக்கான திட்டப் பணிகள், மத்திய மீன்வளத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன்.



மேலும், முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ‘பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்’ அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்பதை உறுதியளித்துள்ளேன்.

களத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை நம்மால் மட்டுமே தர முடியும். தாமரையின் மலர்ச்சியே, நீலகிரியின் வளர்ச்சி என்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...