சின்னக்கம்பாளையத்தில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு - தேர்தலை புறக்கணிக்கபோவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட சின்னக்கம்பாளையம் ஆறாவது வார்டில் செயல்படும் தனியார் தாய் கோழிப்பண்ணையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவின் மீது கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்ததால் சுகாதார சீர்கேட்டின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வருகிறது எனவும், எனவே தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குடியிருப்புகளே இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை 57 குடும்பத்தினரும் புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...