கோவையில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் வரும் ஒரு சில வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், தற்போது, இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா என்னும் நகரத்திலேயே அதிகப்படியாக 44.1 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.


முன்னதாகவே தென்னிந்தியாவில் அதிகப்படியாக கோவையில் கடந்த 10 நாட்களாக  வெப்பம் சுட்டறித்து வருகிறது. கோவையில் வெள்ளூருக்கு இணையாக 37 டிகிரி செல்சியஸ், மதுரை 29 டிகிரி செல்சியஸ், திருநெல்வேலி 24 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 33 டிகிரி செல்சியஸ் என வெப்பம் நிலவி வருகிறது. ஆனால் தற்போது கோவையில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் என்னும் விற்பனை பிரதிநிதி கூறுகையில், கோவையில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாலை 5 மணியளவில் கூட வெயில் சுட்டறிகிறது. இவ்வருடம் கோவையில் நிலவி வரும் வெயில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது' என்றார்.

இதுகுறித்து, தனியார் நிறுவன ஊழியர் ராம் பிரசாத் கூறுகையில், கோவையில் தற்போது நிலவி வரும் வெப்பம் சென்னையை நினைவுபடுத்துகிறது. கடந்த சில வருடங்களாகவே கோவையில் இவ்வாறு தட்ப வெப்ப நிலை மாற்றம் அடைந்துள்ளது. சாலை போக்குவரத்தின்போது சிகனல்களில் நிறுத்தத்திற்கான நேரத்தினை குறைத்தால் மக்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.

சண்முகசுந்திரம் என்னும் முதியவர் கூறுகையில், இதுபோன்ற வெயில் சுட்டறிகும் காலங்களில் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர செல்லும்  பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவையில் தொடர்ந்து வெயில் அதிகரிக்கிறது, மழை பொய்த்து போகிறது.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...