வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்- திருப்பூரில் விக்கிரமராஜா பேட்டி

வணிகர் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்ககங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு வரும் ஐந்தாம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா மாவட்டம் வாரியாக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இது விடுதலை முழக்க மாநாடாக நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தற்போது திருப்பூரில் வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளேன். ஆன்லைன், கார்பரேட் கம்பெனைகளால் எங்களுக்கு அதிக இடர்பாடு, அதுமட்டுமின்றி ஜி எஸ் டி, வரி உயர்வு உள்ளிட்டவைகளால் நாங்கள் பாதிக்கபட்டுள்ளோம். கார்பரேட் கம்பெனி, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.



தேர்தல் ஆணையத்திடம் எங்கள் இடர்பாடுகளை தெரிவித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகலால் வணிகர்கள், வியாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பணம் மட்டுமே பறிக்க படுகிறது. அரசியல் கட்சி பணம் பாதுக்கப்படுகிறது. கடைசி இரண்டு தினங்களில் மட்டும் பறக்கும் படை அதிகாரிகள் செயல்படாமல் இருப்பார்கள். இந்த நிலை மாற வேண்டும். வரும் செவ்வாய் கிழமை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது மனு கொடுக்க உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மளிகை கடைகள் அடைத்து போராட்டம் நடத்தட்படும் என்றார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...