வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்- திருப்பூரில் விக்கிரமராஜா பேட்டி

வணிகர் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்ககங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு வரும் ஐந்தாம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா மாவட்டம் வாரியாக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இது விடுதலை முழக்க மாநாடாக நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தற்போது திருப்பூரில் வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளேன். ஆன்லைன், கார்பரேட் கம்பெனைகளால் எங்களுக்கு அதிக இடர்பாடு, அதுமட்டுமின்றி ஜி எஸ் டி, வரி உயர்வு உள்ளிட்டவைகளால் நாங்கள் பாதிக்கபட்டுள்ளோம். கார்பரேட் கம்பெனி, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.



தேர்தல் ஆணையத்திடம் எங்கள் இடர்பாடுகளை தெரிவித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகலால் வணிகர்கள், வியாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பணம் மட்டுமே பறிக்க படுகிறது. அரசியல் கட்சி பணம் பாதுக்கப்படுகிறது. கடைசி இரண்டு தினங்களில் மட்டும் பறக்கும் படை அதிகாரிகள் செயல்படாமல் இருப்பார்கள். இந்த நிலை மாற வேண்டும். வரும் செவ்வாய் கிழமை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது மனு கொடுக்க உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மளிகை கடைகள் அடைத்து போராட்டம் நடத்தட்படும் என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...