வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்- திருப்பூரில் விக்கிரமராஜா பேட்டி

வணிகர் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்ககங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு வரும் ஐந்தாம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா மாவட்டம் வாரியாக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இது விடுதலை முழக்க மாநாடாக நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தற்போது திருப்பூரில் வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளேன். ஆன்லைன், கார்பரேட் கம்பெனைகளால் எங்களுக்கு அதிக இடர்பாடு, அதுமட்டுமின்றி ஜி எஸ் டி, வரி உயர்வு உள்ளிட்டவைகளால் நாங்கள் பாதிக்கபட்டுள்ளோம். கார்பரேட் கம்பெனி, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.



தேர்தல் ஆணையத்திடம் எங்கள் இடர்பாடுகளை தெரிவித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகலால் வணிகர்கள், வியாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பணம் மட்டுமே பறிக்க படுகிறது. அரசியல் கட்சி பணம் பாதுக்கப்படுகிறது. கடைசி இரண்டு தினங்களில் மட்டும் பறக்கும் படை அதிகாரிகள் செயல்படாமல் இருப்பார்கள். இந்த நிலை மாற வேண்டும். வரும் செவ்வாய் கிழமை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது மனு கொடுக்க உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மளிகை கடைகள் அடைத்து போராட்டம் நடத்தட்படும் என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...