திருப்பூரில் கராத்தே செய்து காண்பித்தபடியே மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்..!

பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.


திருப்பூர்: திருப்பூரில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கராத்தே மாஸ்டர் ஒருவர் கராத்தே சீருடை அணிந்து வந்து, கராத்தே செய்தவாறு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.



இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை திருப்பூர் தொட்டிபாளையம் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதேபோல நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் என 10 தேர்தல் சந்தித்த ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சென்னையே சேர்ந்த, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நாடார் சமுதாய மக்கள் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்த சென்னையில் இருந்து வந்து திருப்பூரில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.



இதேபோல, திருப்பூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து கராத்தே செய்து காண்பித்தபடியே மனு கொடுக்க வந்திருந்தார்.



மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.

திருப்பூரில் இன்று மட்டும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...