உடுமலையில் பறக்கும் படைத்துறையினர் சோதனையில் ரூ.1.88 லட்சம் பறிமுதல்

முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கம்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் பொட்டிய நாயக்கனூர் பிரிவு அருகே, கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சரவணகுமார் தலைமையில் மகாவிஷ்ணு,கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த வழியாக உடுமலை ராமசாமி நகரை சேர்ந்த டாக்டர் பின்னி என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ 89 ஆயிரத்து 550 ஐ கொண்டு சென்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேபோல, கூடுதல் பறக்கும் படை பிரிவு 1ல் கார்த்திக் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி,போலீசார் ஹரிஹர மணிகண்டன், சந்தோஷ்வேல் உள்ளிட்டோர் பொள்ளாச்சி- உடுமலை சாலையில் கோமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(54) என்பவர் ஒட்டி வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர்.அவர் முறையான ஆவணம் இல்லாமல் ரூ 98 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.



அதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் பறிமுதல் செய்த பணம் ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்து 50 ஐ ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் உடுமலை தாசில்தாருமான ப.சுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் சையதுராபியம்மாள், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...