உடுமலையில் பறக்கும் படைத்துறையினர் சோதனையில் ரூ.1.88 லட்சம் பறிமுதல்

முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கம்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் பொட்டிய நாயக்கனூர் பிரிவு அருகே, கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சரவணகுமார் தலைமையில் மகாவிஷ்ணு,கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த வழியாக உடுமலை ராமசாமி நகரை சேர்ந்த டாக்டர் பின்னி என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ 89 ஆயிரத்து 550 ஐ கொண்டு சென்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேபோல, கூடுதல் பறக்கும் படை பிரிவு 1ல் கார்த்திக் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி,போலீசார் ஹரிஹர மணிகண்டன், சந்தோஷ்வேல் உள்ளிட்டோர் பொள்ளாச்சி- உடுமலை சாலையில் கோமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(54) என்பவர் ஒட்டி வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர்.அவர் முறையான ஆவணம் இல்லாமல் ரூ 98 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.



அதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் பறிமுதல் செய்த பணம் ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்து 50 ஐ ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் உடுமலை தாசில்தாருமான ப.சுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் சையதுராபியம்மாள், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...