வால்பாறையில் சாலையில் நடந்து சென்ற 7 காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில சமயம் யானை மனித மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதை வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகம் அதிகாரிகள் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்ட வழியாக ஏழு காட்டு யானைகள் நடந்து வந்து பொள்ளாச்சி சாலையில் நடந்து சென்றது.



எதிரே வந்த வாகனம் ஓட்டுநர்கள் பயந்து திருப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்த வால்பாறை வனச்சாராக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன காவலர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். திடீரென்று காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...