முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் எவர்சில்வர் தட்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசுகையில்., தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள் செயல்படுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.



Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...