முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் எவர்சில்வர் தட்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசுகையில்., தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள் செயல்படுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.



Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...