தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் - 257 வழக்குகளுக்கு தீர்வு

மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை தொடங்கப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம்.தர்ம பிரபு தலைமையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி என்.நாகராஜன், குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு மற்றும் வழக்கறிஞர் எம்பி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.



இதில் மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் ரூ.20,49,04,141 மேலும் வங்கிக் கடன் வழக்கு 12 இதன் மதிப்பு சுமார் 13,79,000 போன்றவைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் 638 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பணியினை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...