தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் - 257 வழக்குகளுக்கு தீர்வு

மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை தொடங்கப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம்.தர்ம பிரபு தலைமையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி என்.நாகராஜன், குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு மற்றும் வழக்கறிஞர் எம்பி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.



இதில் மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் ரூ.20,49,04,141 மேலும் வங்கிக் கடன் வழக்கு 12 இதன் மதிப்பு சுமார் 13,79,000 போன்றவைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் 638 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பணியினை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...