காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் - பெண் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் நடனமாடி மகிழ்ச்சி

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கேயம் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான‌ எஸ்.சந்தான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்குகறிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த மகளிர் தினவிழாவில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு நடனப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்கப் பெற்றனர். மேலும் நீதிபதிகள் பெண்களின் சிறப்புகள் குறித்து அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.



மேலும் பொதுவாழ்க்கையில் பெண்கள் இடையூறுகள் இருந்து எவ்வாறு முன்னேறி வெற்றி அடைவது குறித்தும் எடுத்து கூறினார்கள். மேலும் மகளிர் தினவிழாக்கள் நடைபெறுவது பெண்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு ஒரு உந்துகோலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...