காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் - பெண் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் நடனமாடி மகிழ்ச்சி

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கேயம் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான‌ எஸ்.சந்தான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்குகறிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த மகளிர் தினவிழாவில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு நடனப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்கப் பெற்றனர். மேலும் நீதிபதிகள் பெண்களின் சிறப்புகள் குறித்து அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.



மேலும் பொதுவாழ்க்கையில் பெண்கள் இடையூறுகள் இருந்து எவ்வாறு முன்னேறி வெற்றி அடைவது குறித்தும் எடுத்து கூறினார்கள். மேலும் மகளிர் தினவிழாக்கள் நடைபெறுவது பெண்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு ஒரு உந்துகோலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...