கோவை தடாகம் பகுதிகளில் உள்ள சேம்பர்களில் தொடர்ந்து பழைய இரும்புகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சோமயனூர் MNK செந்தில் ஆகியோரின் சேம்பரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் திருட்டுபோனது.

இதைத்தொடர்ந்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மற்றும் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அந்தோணி காவலர்கள் முனீஸ், ஜனா, பூபதி, கார்த்தி மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தனிப்பிரிவு காவலர் செல்லகண்ணன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இதில் சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த வாகனம் இரும்பு பொருட்களை ஏற்றி செல்லும் போது தடாகம் பகுதியில் உள்ள 12 CCTV camera மூலம் கண்டறிந்து இருவரையும் கைது செய்து போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் 500 கிலோ இரும்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...