கோவை தடாகம் பகுதிகளில் உள்ள சேம்பர்களில் தொடர்ந்து பழைய இரும்புகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சோமயனூர் MNK செந்தில் ஆகியோரின் சேம்பரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் திருட்டுபோனது.

இதைத்தொடர்ந்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மற்றும் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அந்தோணி காவலர்கள் முனீஸ், ஜனா, பூபதி, கார்த்தி மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தனிப்பிரிவு காவலர் செல்லகண்ணன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இதில் சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த வாகனம் இரும்பு பொருட்களை ஏற்றி செல்லும் போது தடாகம் பகுதியில் உள்ள 12 CCTV camera மூலம் கண்டறிந்து இருவரையும் கைது செய்து போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் 500 கிலோ இரும்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...