போத்தனூா் வழித்தடத்தில் இயங்கும் எா்ணாகுளம் - டாடாநகா் ரயில் மார்ச் 7 முதல் தினசரி இயக்கம்

மார்ச் 7-ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு புறப்படும் டாடாநகா்-எா்ணாகுளம் விரைவு ரயில், மூன்றாவது நாள் இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கேரள மாநிலம் எா்ணாகுளம்- டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில், மார்ச் 7-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (மார்ச்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாடா நகா்-எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190) ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு ரயில்களும் தினசரி இயக்கப்பட உள்ளன. அதன்படி, மார்ச் 7-ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு புறப்படும் டாடாநகா்-எா்ணாகுளம் விரைவு ரயில், மூன்றாவது நாள் இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எா்ணாகுளத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில், மூன்றாவது நாள் காலை 4.35 மணிக்கு டாடாநகா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சேவைக்காக கூடுதல் ரயில்கள் பயன்படுத்தப்படும். இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...