போத்தனூா் வழித்தடத்தில் இயங்கும் எா்ணாகுளம் - டாடாநகா் ரயில் மார்ச் 7 முதல் தினசரி இயக்கம்

மார்ச் 7-ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு புறப்படும் டாடாநகா்-எா்ணாகுளம் விரைவு ரயில், மூன்றாவது நாள் இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கேரள மாநிலம் எா்ணாகுளம்- டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில், மார்ச் 7-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (மார்ச்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாடா நகா்-எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190) ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு ரயில்களும் தினசரி இயக்கப்பட உள்ளன. அதன்படி, மார்ச் 7-ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு புறப்படும் டாடாநகா்-எா்ணாகுளம் விரைவு ரயில், மூன்றாவது நாள் இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எா்ணாகுளத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில், மூன்றாவது நாள் காலை 4.35 மணிக்கு டாடாநகா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சேவைக்காக கூடுதல் ரயில்கள் பயன்படுத்தப்படும். இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...