கோவை மாநகராட்சி வ.உ.சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியில் சிக்கிய வாகனங்கள்

வ.உ.சி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது. பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச்.6) காலை கோவை மாநகராட்சி வஉசி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது.



அதேசமயம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டிராக்டர் உதவியுடன் குழியில் சிக்கிய குப்பை சேகரிக்கும் வாகனம் வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி வாகனமும் சாமர்த்தியமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் போது தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...