கோவை மாநகராட்சி வ.உ.சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியில் சிக்கிய வாகனங்கள்

வ.உ.சி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது. பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச்.6) காலை கோவை மாநகராட்சி வஉசி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது.



அதேசமயம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டிராக்டர் உதவியுடன் குழியில் சிக்கிய குப்பை சேகரிக்கும் வாகனம் வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி வாகனமும் சாமர்த்தியமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் போது தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...