உருமாண்டம்பாளையத்தில் பாழடைந்து கிடக்கும் மயானத்தை பராமரிக்க மக்கள் கோரிக்கை

உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை அங்குள்ள மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கோவை: கோவை உருமாண்டம்பாளையத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஊருக்குள் இறக்கும் அனைத்து ஜாதியினரும் புதைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் எரியுட்டும் மேடையும் உள்ளது. இந்தநிலையில் உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை இந்த மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



தற்போது இந்த மயானத்தில் சுமார் 5 அடிக்கும் மேலாக விஷ செடிகள், முற்கள், புல்கள் வளர்த்துள்ளன. மயானத்தின் தண்ணீர் பைப்புகள், மின்சார விளக்குகள் சரியாக வேலைகள் செய்யவில்லை. சவ வண்டிகளும் துருப்பிடித்து பயனற்ற நிலையில் உள்ளன.

இதேபோல வெள்ளகிணர் மயானமும் பாழடைந்து காணப்படுகின்றன. அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக பொதுகழிப்பிடம் இருந்தும் கழிப்பிடம் செல்லாமல் மயானத்திற்கே வருகின்றனர். மேலும் இந்த மயானம் கேட் எப்போதும் திறந்தே கிடக்கிறது. வழிப்பாதையும் சரியாக இல்லை, பல நேரங்களில் இரவு நேரத்தில் தான் இறப்பவர்களை புதைக்க கொண்டுவருகின்றனர். இங்கு பாம்பு, பல்லிகள் அதிகம் சுற்றுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோல உள்ள அனைத்து மயானங்களையும் பராமரிக்க வேண்டும் என்று ஊர்பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...