கோவையில் காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சரவணம்பட்டி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பாலச்சந்தா், சாய்பாபா காலனி (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பிரேம் சுகுமார், செல்வபுரம் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் சுபாஷினி ஆகியோர் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.26) தெரிவித்துள்ளதாவது,

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பாலச்சந்தா், சாய்பாபா காலனி (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பிரேம் சுகுமார், செல்வபுரம் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் சுபாஷினி, குனியமுத்தூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) கார்த்திகேயன், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளா் கருப்பசாமி ஆகியோர் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் அருள் பெருமாள், பீளமேடு காவல் நிலையத்தின் புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சுந்தராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விக்னேஷ், உக்கடம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பீளமேடு காவல் நிலைய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜெயபாலன், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அருணாச்சலம், சுந்தராபுரம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

போத்தனூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் செல்வம், பெரிய கடைவீதி காவல் நிலைய உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சிங்காநல்லூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் கஸ்தூரி, ராமநாதபுரம் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சோம சுந்தரம், சிங்காநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக (சட்டம் -ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.

சாய்பாபா காலனி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் ஆனந்தகுமார், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த நாகராஜ், துடியலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...