கோவையில் காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சரவணம்பட்டி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பாலச்சந்தா், சாய்பாபா காலனி (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பிரேம் சுகுமார், செல்வபுரம் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் சுபாஷினி ஆகியோர் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.26) தெரிவித்துள்ளதாவது,

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பாலச்சந்தா், சாய்பாபா காலனி (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பிரேம் சுகுமார், செல்வபுரம் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் சுபாஷினி, குனியமுத்தூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) கார்த்திகேயன், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளா் கருப்பசாமி ஆகியோர் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் அருள் பெருமாள், பீளமேடு காவல் நிலையத்தின் புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சுந்தராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விக்னேஷ், உக்கடம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பீளமேடு காவல் நிலைய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜெயபாலன், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அருணாச்சலம், சுந்தராபுரம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

போத்தனூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் செல்வம், பெரிய கடைவீதி காவல் நிலைய உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சிங்காநல்லூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் கஸ்தூரி, ராமநாதபுரம் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சோம சுந்தரம், சிங்காநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக (சட்டம் -ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.

சாய்பாபா காலனி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் ஆனந்தகுமார், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த நாகராஜ், துடியலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...