கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று (பிப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களிலும், மின்கம்பங்களிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியின்றி இணையதள கேபிள், உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் மற்றும் அலைபேசி கேபிள் போன்ற கேபிள்கள் உள்ளன.

இந்த கேபிள்கள் மூலமாக மாநகரின் அழகியல் குறைவதுடன் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. பிரதான சாலைகள் சந்திப்பில் வயர்கள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...