கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று (பிப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களிலும், மின்கம்பங்களிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியின்றி இணையதள கேபிள், உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் மற்றும் அலைபேசி கேபிள் போன்ற கேபிள்கள் உள்ளன.

இந்த கேபிள்கள் மூலமாக மாநகரின் அழகியல் குறைவதுடன் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. பிரதான சாலைகள் சந்திப்பில் வயர்கள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...