கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று (பிப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களிலும், மின்கம்பங்களிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியின்றி இணையதள கேபிள், உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் மற்றும் அலைபேசி கேபிள் போன்ற கேபிள்கள் உள்ளன.

இந்த கேபிள்கள் மூலமாக மாநகரின் அழகியல் குறைவதுடன் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. பிரதான சாலைகள் சந்திப்பில் வயர்கள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...