கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று (பிப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களிலும், மின்கம்பங்களிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியின்றி இணையதள கேபிள், உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் மற்றும் அலைபேசி கேபிள் போன்ற கேபிள்கள் உள்ளன.

இந்த கேபிள்கள் மூலமாக மாநகரின் அழகியல் குறைவதுடன் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. பிரதான சாலைகள் சந்திப்பில் வயர்கள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...