செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 22 பேர் கைது

தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 22 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று (பிப்.19) மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48), பருவாய் கார்த்திக் (வயது 40), லூர்துபுறம் செல்வராஜ் (வயது 60), ருத்ரவதி விஸ்வநாதன் (வயது 50), வெள்ளியங்காடு செந்தில்குமார் (வயது 51), காட்டம்பட்டி மூர்த்தி (வயது 46), வடுகபாளையம் கதிர்வேல் (வயது 48), தென்னம்பாளையம் சேகர் (வயது 52), விஜயமங்கலம் (வயது36), வெள்ளியங்காடு மருதாச்சலம் (வயது53) உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...