செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 22 பேர் கைது

தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 22 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று (பிப்.19) மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48), பருவாய் கார்த்திக் (வயது 40), லூர்துபுறம் செல்வராஜ் (வயது 60), ருத்ரவதி விஸ்வநாதன் (வயது 50), வெள்ளியங்காடு செந்தில்குமார் (வயது 51), காட்டம்பட்டி மூர்த்தி (வயது 46), வடுகபாளையம் கதிர்வேல் (வயது 48), தென்னம்பாளையம் சேகர் (வயது 52), விஜயமங்கலம் (வயது36), வெள்ளியங்காடு மருதாச்சலம் (வயது53) உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...