செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 22 பேர் கைது

தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 22 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று (பிப்.19) மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48), பருவாய் கார்த்திக் (வயது 40), லூர்துபுறம் செல்வராஜ் (வயது 60), ருத்ரவதி விஸ்வநாதன் (வயது 50), வெள்ளியங்காடு செந்தில்குமார் (வயது 51), காட்டம்பட்டி மூர்த்தி (வயது 46), வடுகபாளையம் கதிர்வேல் (வயது 48), தென்னம்பாளையம் சேகர் (வயது 52), விஜயமங்கலம் (வயது36), வெள்ளியங்காடு மருதாச்சலம் (வயது53) உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...