செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 22 பேர் கைது

தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 22 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று (பிப்.19) மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48), பருவாய் கார்த்திக் (வயது 40), லூர்துபுறம் செல்வராஜ் (வயது 60), ருத்ரவதி விஸ்வநாதன் (வயது 50), வெள்ளியங்காடு செந்தில்குமார் (வயது 51), காட்டம்பட்டி மூர்த்தி (வயது 46), வடுகபாளையம் கதிர்வேல் (வயது 48), தென்னம்பாளையம் சேகர் (வயது 52), விஜயமங்கலம் (வயது36), வெள்ளியங்காடு மருதாச்சலம் (வயது53) உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...