உடுமலை அருகே குருமலை பகுதியில் மலை கிராமத்தில் சிறப்பு ஆதார் சேவை முகாம்

ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது எனவும், இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனவும் மலைவாழ்மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்குள்ள பொறுப்பாரு, கோடந்தூர், ஆட்டுமலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல், குருமலை, குலிப்பட்டி, மேல்குருமலை, காட்டுப்பட்டி, கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டை புதிதாக எடுத்தல், திருத்தம், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்காக உடுமலை பகுதிக்கு வரவேண்டிய சூழல் இருந்தது. இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் உயிரை பணயம் வைத்து பயணித்து அடிவார பகுதிக்கு வருகை தந்து வாகனத்தை பிடித்து உடுமலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

அதுவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இதனால் ஆதாரை மையமாகக் கொண்ட பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறுவதிலும் தடங்கல்கள் நிலவி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து மலைவாழ் கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் குருமலை பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. நாளை குலிப்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் நாங்கள் பெருத்த சிரமத்துக்கு இடையில் உடுமலைக்கு சென்று வர வேண்டிய நிலை மாறி உள்ளது.அதுமட்டுமின்றி வயதானவர்கள் குழந்தைகள் எளிதாக பதிவு செய்ய முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...