கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாதக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோரை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.


கோவை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கோவை மண்டல செயலாளர் வகாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலி்ல் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். முன்னதாக பேசிய கலாமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக கூறிய அவர், தொழில் துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளை தொழில் துறையினர் சந்தித்து வருவதாக கூறினார்.

ஆளும் மத்திய, மாநில அரசுகள் இன்று வரை தீர்வு காணாத நிலையில் நாங்கள், இந்த முறையும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். கோவை தடாகம் பகுதியில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ் கூறுகையில், பொள்ளாச்சியில் தென்னை நார் தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு மத்தியஅரசின் தவறான வரிக்கொள்கையே பிரச்சனைக்கு முக்கிய காரணம். ஜி.எஸ்.டி பிரச்சனைகளால் தொழில் பாதிக்கப்பட்டது. போதிய நிதியை வழங்காததால் மாநில அரசும் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது. பிரதான பிரச்சனைகளை முன் வைத்து எங்கள் பிரச்சாரம் இருக்கும் என கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...