கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாதக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோரை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.


கோவை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கோவை மண்டல செயலாளர் வகாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலி்ல் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். முன்னதாக பேசிய கலாமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக கூறிய அவர், தொழில் துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளை தொழில் துறையினர் சந்தித்து வருவதாக கூறினார்.

ஆளும் மத்திய, மாநில அரசுகள் இன்று வரை தீர்வு காணாத நிலையில் நாங்கள், இந்த முறையும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். கோவை தடாகம் பகுதியில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ் கூறுகையில், பொள்ளாச்சியில் தென்னை நார் தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு மத்தியஅரசின் தவறான வரிக்கொள்கையே பிரச்சனைக்கு முக்கிய காரணம். ஜி.எஸ்.டி பிரச்சனைகளால் தொழில் பாதிக்கப்பட்டது. போதிய நிதியை வழங்காததால் மாநில அரசும் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது. பிரதான பிரச்சனைகளை முன் வைத்து எங்கள் பிரச்சாரம் இருக்கும் என கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...