கோவை மாவட்டத்தில் போலீஸ் உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் கடந்த 6-ந் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

கோவையில் உடற்தகுதி தேர்வுகள் பெண்களுக்கு நேரு விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் நாளில் சான்றிதழ், உயரம் சரிபார்ப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர். கடந்த 6ம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்த இந்த உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...