அதிமுக, திமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைய உள்ளனர் - கோவையில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் பேட்டி

அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் தான் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமானநிலையத்தில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் இவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அதேபோல் ஜே.பி.நாட்டா தமிழகம் வரும்போது இன்னும் அதிமுக, திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பாஜக தான் ஆட்சியில் இருக்கும்.

தொழில்துறையான கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாஜகவில் இணைந்திருக்கிறோம். ஊழல் பட்டியல் வெளியிடும் இளம் தளபதி, இளம் சிங்கம் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரின் கரத்தை வலுபடுத்துவோம். எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், எடப்பாடி, திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா என கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல தவிழ்ந்து போய் வந்தவர்களா என அவர் பேசினார்.

பின்னர், சிங்கநல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க தலைவருமான சின்னசாமி பேசியதாவது, அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. திமுக - அதிமுகவை ஒழிப்பதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறார் என்று பேசினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...