அதிமுக, திமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைய உள்ளனர் - கோவையில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் பேட்டி

அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் தான் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமானநிலையத்தில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் இவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அதேபோல் ஜே.பி.நாட்டா தமிழகம் வரும்போது இன்னும் அதிமுக, திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பாஜக தான் ஆட்சியில் இருக்கும்.

தொழில்துறையான கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாஜகவில் இணைந்திருக்கிறோம். ஊழல் பட்டியல் வெளியிடும் இளம் தளபதி, இளம் சிங்கம் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரின் கரத்தை வலுபடுத்துவோம். எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், எடப்பாடி, திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா என கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல தவிழ்ந்து போய் வந்தவர்களா என அவர் பேசினார்.

பின்னர், சிங்கநல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க தலைவருமான சின்னசாமி பேசியதாவது, அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. திமுக - அதிமுகவை ஒழிப்பதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறார் என்று பேசினார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...