உடுமலையில் கட்டி முடிக்கப் பட்ட நடை மேம்பாலத்தை திறக்க மக்கள் வலியுறுத்தல்

பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதனால் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பொள்ளாச்சி- உடுமலை, பழனி-உடுமலை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அத்துடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது.

ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது. சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலமும் அதில் உள்ள லிப்ட்டும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது.

இதனால் அந்த பாலம் கட்டப்பட்ட நோக்கமும், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்ற நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...