உடுமலையில் கட்டி முடிக்கப் பட்ட நடை மேம்பாலத்தை திறக்க மக்கள் வலியுறுத்தல்

பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதனால் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பொள்ளாச்சி- உடுமலை, பழனி-உடுமலை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அத்துடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது.

ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது. சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலமும் அதில் உள்ள லிப்ட்டும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது.

இதனால் அந்த பாலம் கட்டப்பட்ட நோக்கமும், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்ற நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...