பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.


கோவை: ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து துறை, காவல் துறை சார்பில் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.



சாலை பாதுகாப்பு குறித்த அம்சங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு தேசியப்படை மாணவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது.



அப்போது விபத்து இல்லா தமிழகத்தை உருவாக்க வாகன ஓட்டிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...