பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.


கோவை: ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து துறை, காவல் துறை சார்பில் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.



சாலை பாதுகாப்பு குறித்த அம்சங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு தேசியப்படை மாணவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது.



அப்போது விபத்து இல்லா தமிழகத்தை உருவாக்க வாகன ஓட்டிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...