பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம்

தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் 30வது நாளான இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் LJJ ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி மற்றும் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வால்பாறை கிட்டு, மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் ரவிச்சந்திரன், பொள்ளாச்சி மேற்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட தேமுதிக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...