பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம்

தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் 30வது நாளான இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் LJJ ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி மற்றும் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வால்பாறை கிட்டு, மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் ரவிச்சந்திரன், பொள்ளாச்சி மேற்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட தேமுதிக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...