பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம்

தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் 30வது நாளான இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் LJJ ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி மற்றும் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வால்பாறை கிட்டு, மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் ரவிச்சந்திரன், பொள்ளாச்சி மேற்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட தேமுதிக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...