உடுமலை அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழாவில் இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியின் முதல்வர் கே.தீபு நினைவு கூர்ந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுக்காப்புதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராணுவ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற மாணவர்களின் மிடுக்கான கண்கவர் அணிவகுப்பு ஏற்று கொண்ட பின் பள்ளி முதல்வர் (பொறுப்பு)லெப்டினன்ட் கே.தீபு தேசிய கொடி ஏற்றினர்.

பின்னர் முதல்வர் பேசும் பொழுது, இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை நினைவில் கூர்ந்தார். 75 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அறிவியல் விவசாய மருத்துவ மற்றும் சுகாதாரமாக துறைகளில் தேசத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.



நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு கால வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி செல்வதற்கான இலக்கை உணர்ந்து கொண்டு செயல்பட அறிவுறுத்தினார். பின்னர் முதல்வர் அமர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியாக பள்ளி பேண்ட் அணியின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...