கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும் என்று கற்பகம் கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் ரவி பேசினார்.


கோவை: கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர். இராச. வசந்தகுமார் அவர்கள் விழாவில் தேசியக்கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.



பதிவாளர் முனைவர் சு.இரவி அவர்கள், குடியரசுதின விழா பேருரை ஆற்றினார். '



பழமையான குடியரசு நாடாகிய இந்தியாவின் தனித் தன்மையைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. நாளும் பல புதிய செயற்கைக்கோள்களை ஏவுதல் முதலான பல தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. அத்தகைய உயர்வை என்றும் நிலைநிறுத்த இளைஞர்களின் சமுதாயப் பொறுப்புணர்வும், பொதுநல உழைப்பும் தேவை.

அனைத்து துறைகளிலும் நாட்டை வலிமையாக்க, இளைஞர் நலன் நாளும் மேம்பட வேண்டும். இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும்' என்றார்.

தேசிய மாணவர்ப்படை வீரர்களும், கேப்டன் சிறீதரன் ‌அவர்களும் விழாவில் பாராட்டுப் பெற்றனர். விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் க. முருகையா, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...