கோயம்புத்தூர் மாநகராட்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் மரியாதை

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 73 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு நற்சான்றிதழ்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று 26.01.2024 காலை 8.05 மணிக்கு குடியரசு தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன் பின்னர், விக்டோரியா ஹால் வளாகத்தில் உள்ள இந்திய தேசியக் கொடியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள். மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, க.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.



கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 9 பேருக்கு வெகுமதியாக தலா ரூ.2000/- மற்றும் நற்சான்றிதழ்களையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 35 பேருக்கும், சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து வாங்கியமைக்காக தூய்மைப்பணியாளர்கள் 25 பேருக்கும், வெள்ளலூர் உரக்கிடங்கில் சிறந்த முறையில் பராமரித்து பணிபுரிந்தமைக்காக 4 பேருக்கும், என ஆகமொத்தம் 73 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.



பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்காட்சியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரத்தினபுரி, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் இளஞ்செல்வி கார்த்திக் மண்டல குழுத்தலைவர் (கிழக்கு), இலக்குமி நிலைக்குழுத்தலைவர்கள் பெ.மாரிச்செல்வன் (பொது சுகாதாரம்), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...