கோவையில் மருதமலை தைப்பூச திருவிழா சிறப்பாக நடக்க அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கோவை மருதமலை தைப்பூசத்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற, அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மேலும் 25ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இவ்விழா, 28 வரை நடைபெற உள்ளது. இதேபோல், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிப்.28ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (ஜன.19) நடந்தது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது, கோவை மருதமலை தைப்பூசத்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற, அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போக்குவரத்து நெறிமுறைகளை தெரியப்படுத்த வேண்டும். போதிய எண்ணிக்கையில் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மொபைல் டாய்லெட் வசதி, குடிநீர் வினியோகம் தடையின்றி மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடர் துாவி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். துாய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயாராக நிறுத்தி வைக்க வேண்டும்; தேவையான பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். தேர்த்திருவிழா துவங்கும் முன், திருத்தேரின் சக்கரங்கள் மற்றும் தேர் வடம் ஆகியவற்றின் உறுதி தன்மையை பரிசோதித்து, தேர் இயங்குவதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வன விலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பக்தர்கள் வழிபாடு செய்ய போதிய பாதுகாப்பு வழங்கவும், சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி சப்ளை செய்யவும், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தேர் செல்லும் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை சரிவர கண்காணிக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக நிறுத்தியிருக்க வேண்டும். முதலுதவி அளிக்க டாக்டர்களுடன் மருத்துவ முகாம் செயல்பட வேண்டும். தேர் செல்லும் பாதையில் மேடு, பள்ளம் இருந்தால், செப்பனிட வேண்டும். தேர்த்திருவிழா நடைபெறும் பிப்., 28 அன்று, நகர பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை மாற்று வழித்தடங்களில் அனுப்ப வேண்டும். மாநகராட்சி, காவல்துறை, கோவில் நிர்வாகம், மின்வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் ஹர்சினி, கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...