தாராபுரத்தில் நகர திமுக சார்பில் பொங்கல் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500பேருக்கு அமைச்சர் கயல்விழி சர்க்கரை பொங்கல் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைவருக்கும் சமத்துவ பொங்கல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில், நகரச் செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், திமுக மகளிர் அணி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



அப்போது அங்கு இருந்த மகளிர் அணி தொண்டர்கள் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டும் பாடினர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் 500க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...