தாராபுரத்தில் நகர திமுக சார்பில் பொங்கல் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500பேருக்கு அமைச்சர் கயல்விழி சர்க்கரை பொங்கல் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைவருக்கும் சமத்துவ பொங்கல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில், நகரச் செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், திமுக மகளிர் அணி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



அப்போது அங்கு இருந்த மகளிர் அணி தொண்டர்கள் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டும் பாடினர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் 500க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...