தாராபுரத்தில் நகர திமுக சார்பில் பொங்கல் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500பேருக்கு அமைச்சர் கயல்விழி சர்க்கரை பொங்கல் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைவருக்கும் சமத்துவ பொங்கல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில், நகரச் செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், திமுக மகளிர் அணி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



அப்போது அங்கு இருந்த மகளிர் அணி தொண்டர்கள் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டும் பாடினர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் 500க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...