பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா துவங்கியது, நான்கு பலூன்கள் 100அடி உயரம் வரை பறந்தன.
கோவை: பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழாவின் துவக்க விழா ஜனவரி 12 அன்று நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம் , நெதர்லாண்ட்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து வந்த 11 பலூன்கள் நாளை வானில் பறக்க உள்ளன. சோதனை ஓட்டமாக, நான்கு பலூன்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் 100 அடி வரை பறந்தன.

பொள்ளாச்சி மக்கள் இந்த அற்புதமான காட்சியை வியந்து பார்த்தனர்.

வெப்பக்காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு 1600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவிழா ஜனவரி 16 வரை நீடிக்கும்.

பலூன் திருவிழாவின் இறுதி நாளில், மக்கள் பலூனில் பறக்க அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம் , நெதர்லாண்ட்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து வந்த 11 பலூன்கள் நாளை வானில் பறக்க உள்ளன. சோதனை ஓட்டமாக, நான்கு பலூன்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் 100 அடி வரை பறந்தன.
பொள்ளாச்சி மக்கள் இந்த அற்புதமான காட்சியை வியந்து பார்த்தனர்.
வெப்பக்காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு 1600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவிழா ஜனவரி 16 வரை நீடிக்கும்.
பலூன் திருவிழாவின் இறுதி நாளில், மக்கள் பலூனில் பறக்க அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.