உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கலை வரவேற்கும் விதமாக சலகெருது, தேவராட்டம் ஆடிக் கொண்டாட்டம்

பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வழிபாடு நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான பெதம்பம்பட்டி, எஸ்.அம்மாபட்டி, லிங்கமாவூர், கொங்கல்நகரம் புதூர், பொட்டயம்பாளையம், சனுப்பட்டி, வல்லகுண்டபுரம், மரிக்கந்தை, கொங்கலகுறிச்சி, வாளவாடி உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிராம மக்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதங்களில் இரவு நேரங்களில் காளைகளுடன் சல கெருது, தேவராட்டம் ஆடி வருகின்றனர்.



மேலும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சலகெருது மறித்தல் எணும் விளையாட்டை ஆடுவார்கள்.



குச்சிகளை நீட்டினால் காளைகள் முட்ட வரும்.



குச்சிகளை குறுக்கே வைத்தால் காளைகள் நிற்கவும் பழக்கி ஆடும் இந்த ஆட்டதோடு இல்லாமல் உருமி இசைகருவி முழுங்க தேவராட்டம், இரட்டையர் தேவாராட்டம் ஆண்கள் ஆடுவார்கள்.



மேலும் பாரம்பரியமான பாடல்களுக்கு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடையும் தங்களது மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.

பொங்கலுக்கு முன்பு காளைகளுக்கு படையல் செய்து அவற்றை காளைகள் உண்ட பின்பே பொங்கலை கொண்டாட தொடங்கும் கிராமத்தினர் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டுவார்கள்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் காலம் காலமாக இந்த நிகழ்வு தொடர்ந்து வருவதாக கூறும் கிராமத்தினர், கால்நடைகளை தெய்வம் ஆக கருதி வருகிறோம் என்றனர். ஒற்றுமையை வளர்கவும், கொட்டும் பணியை விரட்டவும் சிறந்த உடற்பயிற்சியாகவும் ஆடும் இந்த சலகெருது மறித்தல், தேவராட்டம் உள்ளிட்டவை விவசாயமும், கால்நடை வளர்ப்புமே பிரதானமாக இருந்த காலத்தில் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தில் இரவு தொடங்கி பொங்கல் வரை நள்ளிரவு வரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...