பொள்ளாச்சி அருகே பரமக்குடியிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வளைவில் திரும்ப முயன்றபோது பஸ் மோதியதில், டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் பகுதியில் வளைவில் திரும்ப முயன்ற டிராக்டர் மீது 54 பயணிகளுடன் பரமக்குடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு கோவை வழியாக பொள்ளாச்சி மாசாணியம்மன்கோவில் மற்றும் பழனிக்கு வந்த சுற்றுலாப் பேருந்தானது கோயமுத்தூர் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

பேருந்தில் பயணித்த 8 பேருக்கு சிறு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது. விபத்து காரணமாக பொள்ளாச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குபதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...